செய்திகள் :

இஸ்ரேலுக்கு சீனா, ரஷியா கண்டனம்! இரு நாட்டு அதிபர்கள் விவாதம்!

post image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் - ஈரான் போரால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மை நிலவி வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, சீனா மற்றும் ரஷியா அதிபர்கள் இருவரும் தொலைபேசியில் விவாதித்தனர். சீனா, ரஷியா ஆகிய இரு நாடுகளும் ஈரானுக்கு நெருங்கிய நட்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரின் உரையாடலில் சீன அதிபர் ஸி ஜின்பிங் பேசுகையில், பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேற்கு ஆசியாவில் மோதலைத் தீர்க்க, முன்னுரிமையான அவசர நடவடிக்கையாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மோதல் அதிகரித்தால், மற்றைய நாடுகளும் பெரிதளவில் பாதிக்கும். ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் பிற விதிமுறைகளையும் இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பேச்சுவார்த்தை மூலமாக பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க:வெறும் கீறல் மட்டுமே! ராக்கெட் வெடித்துச் சிதறிய விபத்தில் எலான் நகைச்சுவை?

ஈரானுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல்! டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக் கணிப்பு!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடாவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - பாகிஸ்தான் ராணுவத் தளபதி பரிந்துரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் வலியுறுத்தியுள்ளார்.5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் ... மேலும் பார்க்க

ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை: பாகிஸ்தான்

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் த... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை!

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பீரங்கி எதிர்புப் படையின் தளபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. லெபானின் தெற்குப் பகுதியிலுள்ள நபாட்டியா மாகாணத்தில், இஸ்ரேல் ராண... மேலும் பார்க்க

நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்கள்!

இஸ்ரேல் பிரதமர் செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஈரானின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தலை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து..! இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்ப... மேலும் பார்க்க