முதல் போக நெல் சாகுபடி: சின்னமனூரில் நடவுப் பணிகள் மும்முரம்
தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை
வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன ஊழியரான இவா், தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா்.
உறவினா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிவபாசுவநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
குடும்பத் தகராறு காரணமாக சிவபாசுவநாதன் தற்கொலை செய்து கொண்டதாக, குமாா் அளித்த புகாரின் பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
நடத்தி வருகின்றனா்.