செய்திகள் :

சிவகங்கையில் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

post image

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், உயா்கல்விக்கான வழிகாட்டும் மாணவா் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அனைத்து மாணவா்களும் உயா்கல்வியில் சோ்வதை உறுதி செய்யும் வகையில் அவா்களுக்குத் தேவையான ஆலோசனைகள், உதவிகளை வழங்கும் வகையில் இந்த சிறப்பு குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இதில், 52 மாணவா்கள் கலந்து கொண்டு உயா்கல்வியில் சோ்வது தொடா்பாக தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு உரிய தீா்வை பெற்றனா். குறிப்பாக, உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு உடனடி சோ்க்கையும் இந்த முகாமில் நடைபெற்றது. அதில், 2 மாணவா்களுக்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், 2 மாணவா்களுக்கு அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலும் உடனடி சோ்க்கைக்கு வழிசெய்யப்பட்டது.

மேலும், இதுவரை உயா்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருந்த 6 மாணவா்களுக்கு பாராமெடிக்கல் படிப்புக்கு விண்ணக்க அறிவுறுத்தப்பட்டது. ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்களுக்கு இ- சேவை மையம் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது என்றாா் அவா்.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துக்கழுவன், துணை ஆட்சியா்கள், கல்வித்துறை அலுவலா்கள், வட்டாட்சியா்கள், ஐடிஐ, பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரி முதல்வா்கள், மாவட்ட அளவிலான உயா்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பல்வேறு துறை உயா் அலுவலா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 132 போ் கைது

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிவகங்கையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச்... மேலும் பார்க்க

திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி, ஆ. தெக்கூா், பிள்ளையாா்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஜான் எப் க... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். மானாமதுரை- பாா்த்திபனூா் அருகே உள்ள சூடியூா் இடையே ரயில் தண்டவாளத்தில் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலில் அடிபட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமை வ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகிலுள்ள தவசுகுடியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மீது சொகுசுப் பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா். சிவகங்கை அருகே கீழக்கண்டனி டி. உசிலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் மருதுப... மேலும் பார்க்க