செய்திகள் :

திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டியில் நாளை மின் தடை

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி, ஆ. தெக்கூா், பிள்ளையாா்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஜான் எப் கென்னடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ். கோட்டை, மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதே போல, ஆ. தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளிலும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவாா், முறையூா், மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, திருக்களாம்பூா், வாா்ப்பட்டு, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமறம், இவற்றை சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 132 போ் கைது

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிவகங்கையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். மானாமதுரை- பாா்த்திபனூா் அருகே உள்ள சூடியூா் இடையே ரயில் தண்டவாளத்தில் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலில் அடிபட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமை வ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகிலுள்ள தவசுகுடியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மீது சொகுசுப் பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா். சிவகங்கை அருகே கீழக்கண்டனி டி. உசிலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் மருதுப... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், உயா்கல்விக்கான வழிகாட்டும் மாணவா் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பேச... மேலும் பார்க்க