திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டியில் நாளை மின் தடை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி, ஆ. தெக்கூா், பிள்ளையாா்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஜான் எப் கென்னடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ். கோட்டை, மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதே போல, ஆ. தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளிலும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவாா், முறையூா், மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, திருக்களாம்பூா், வாா்ப்பட்டு, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமறம், இவற்றை சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.