செய்திகள் :

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

post image

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரில் இருந்து சூரத் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது, விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறிய ஆயுர்வேத பெண் மருத்துவர் வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்பவர் இரண்டு கைப் பைகளுடன் வந்துள்ளார்.

ஒரு பையை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 20 எஃப் இருக்கைக்கான இடத்தில் வைத்த அவர், மற்றொரு பையை விமான ஊழியர்கள் அமரும் பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்துள்ளார்.

இதனை பார்த்த விமான ஊழியர்கள் பையை எடுக்குமாறும், ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த வியாஸ் ஹிரல், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தனது பையை அங்கிருந்து எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு விமானி தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, வியாஸ் ஹிரல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனால், இரண்டு மணிநேர தாமதத்துக்குப் பிறகு சூரத்துக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.

மேலும், கைது செய்யப்பட்ட வியாஸ் ஹிரல், காவல் நிலையத்திலும் போலீசாரை அவதூறு வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காவல் நிலையத்துக்கு விரைந்த அவரது கணவர், சமீபகாலமாக பொது இடங்களில் வியாஸ் ரகளையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வியாஸ் ஹிரலிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : ஈரானைத் தாக்கக் கூடாது! அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.... மேலும் பார்க்க