செய்திகள் :

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

post image

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முற்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா போரை நிறுத்தியது.

இதனிடையே, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளம் தாக்குதலுக்கு உள்ளானதால், போரை நிறுத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ``நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. தாக்குதலின்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் நான் பேசியது குறித்து சௌதி இளவரசர் பைசன் கேட்டறிந்தார்.

போரை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டால், பாகிஸ்தானும் ஒப்புக் கொள்ளுமா என்று என்னை பைசல் கேட்டார். நானும் சரி என்று கூறினேன்.

தொடர்ந்து, மீண்டும் அழைத்த பைசல், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாகக் கூறினார். என்னிடம் சொன்னதைத் தான் ஜெய்சங்கரிடமும் கூறியதாகச் சொன்னார்’’ என்று தெரிவித்தார்.

ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நிறுத்த, தான் மட்டுமே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபகாலமாக கூறி வந்தார். இரு நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தி விடுவதாகக் கூறி, போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வந்தார்.

இந்த நிலையில், போர் நிறுத்த முடிவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள்தான் முடிவெடுத்தன என்று வியாழக்கிழமையில் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.

இதையும் படிக்க:இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு!

பறவை மோதியதால் தில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப... மேலும் பார்க்க

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க