செய்திகள் :

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

post image

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு சோதனைகள் நிலுவையில் இருந்தபோதிலும்கூட, அந்த விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) எச்சரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வேண்டிய ஏர்பஸ் ஏ 320 ஜெட் விமானம், ஒரு மாதகாலம் ஆகியும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல், துபை, ரியாத், ஜெட்டா போன்ற சர்வதேச இடங்களுக்கு பயணித்தது தெரிய வந்தது.

மற்றொன்றாக, ஏர்பஸ் ஏ 319 விமானம், பாதுகாப்பு சோதனையில் 3 மாதங்களுக்கும் மேலாக உட்படுத்தப்படாமல், உள்நாட்டு வழித்தடங்களில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இவைதவிர, மற்றொரு விமானமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படாதது தெரிய வந்தது.

இந்த விமானங்களில் அவசரகாலத்தில் தப்பிப்பதற்கான அவசர உபரணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.

இவ்வாறு, பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தாமல், விமானத்தை இயக்குவது என்பது நிலையான விமானத் தகுதி மற்றும் பாதுகாப்புத் தேவைகளை மீறுவதாகும்.

இதையும் படிக்க:லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க

உத்தரபிரப் தேசத்தில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலி

உத்தரபிரப் தேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள். முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பா... மேலும் பார்க்க

பறவை மோதியதால் தில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப... மேலும் பார்க்க

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க