செய்திகள் :

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

post image

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், இந்த நிகழ்வில் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பிகாரில் காட்டு ராஜ்ஜியத்தைக் கொண்டுவந்து மாநிலத்தை சூறையாடிவர்களுக்கு இந்தத் தேர்தலில் வாக்களியுங்கள். நாங்கள் அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறுகிறோம். ஆனால், அதிகாரப் பதவிகளுக்கு ஆசை கொண்டுள்ள ராஷ்டிரிய ஜன தளமும் (ஆர்ஜேடி), காங்கிரஸும் இணைந்து சொந்த குடும்பத்துக்கான வளர்ச்சியை மட்டுமே பார்க்கின்றனர். மாநிலத்துக்கான வளர்ச்சி எதுவுமில்லை.

இந்தியாவில் வறுமைக்கு காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸின் தலைவர்களின் குடும்பங்கள் பணக்காரர்களாக மாறியபோது, நாட்டில் உள்ள​​மக்கள் ஏழைகளாகவே இருந்தனர். இதில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்” என்றார்.

இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணி, ஆர்ஜேடி தலைமையிலான மகாகட்பந்தனுடன் நேருக்கு நேரான மோதலில் மீண்டும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள இலக்கு வைத்துள்ளது.

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் முனைப்பில், பிரதமர் மோடி கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை பிகாருக்கு வருகை தந்திருக்கிறார்.

ஆர்ஜேடியின் கோட்டைகள் எனக் கருதப்படும் சிவான், கோபால்கஞ்ச், சாப்ரா ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி, வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

அம்பேத்கரின் உருவப்படத்தை லாலு பிரசாத் யாதவ் அவமதித்ததாகக் கூறப்படும் சர்ச்சையைத் தொடர்ந்து, ஆர்ஜேடி கட்சியை குறிவைத்து பேசிய பிரதமர் மோடி, “அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களை பிகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றும் வலியுறுத்தினார்.

பிகாரில் இருக்கும் 20 சதவிகிதத்திலான தலித் மக்களின் ஓட்டுகளை குறிவைப்பதற்காக பிரதமர் மோடி அம்பேத்கர் குறித்த சர்ச்சை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க

உத்தரபிரப் தேசத்தில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலி

உத்தரபிரப் தேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள். முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பா... மேலும் பார்க்க

பறவை மோதியதால் தில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப... மேலும் பார்க்க

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க