செய்திகள் :

இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் வெற்றிகரமாக செயல்படுவார்: அஜிங்க்யா ரஹானே

post image

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்படுவார் என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று (ஜூன் 20) தொடங்கியது.

இதையும் படிக்க: ஸ்மித் காயம், லபுஷேன் நீக்கம்: இளம் வீரர்களுடன் களமிறங்கும் ஆஸி.!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே ஆதரவு

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவார் என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தனிப்பட்ட முறையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில், இங்கிலாந்தில் தொடக்க ஆட்டக்காரர் நன்றாக விளையாடுவது மிகவும் முக்கியம். யஷஸ்வி ஜெய்ஸ்வாலால் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கவும் முடியும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்படவும் முடியும். அதனால், இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் எப்படி செயல்படப் போகிறார் என்பதை மிகவும் ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

8 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா கருண் நாயர்?

இந்திய அணி வீரர் கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (ஜூன் 20) தொடங்கிய... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்த சாய் சுதர்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று (... மேலும் பார்க்க

அனுபவமற்ற இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும்: முன்னாள் வீரர்கள்

இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளு... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணி விவரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன்... மேலும் பார்க்க

ஆஸி. ஏ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக டிம் பெய்னி நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டிம் பெய்னி நியமிக்கப்பட்டார். பாலியல் ரீதியாக சக பெண் பணியாளருக்கு கடந்த 2021-இல் குறுஞ்செய்தி அனுப்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியவ... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: மழையால் பாதிக்கப்படுமா?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க