அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
ஆஸி. ஏ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக டிம் பெய்னி நியமனம்!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டிம் பெய்னி நியமிக்கப்பட்டார்.
பாலியல் ரீதியாக சக பெண் பணியாளருக்கு கடந்த 2021-இல் குறுஞ்செய்தி அனுப்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியவர் டிம் பெய்னி. பின்னர், கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெற்றார்.
முன்னாள் ஆஸி. கேப்டனும் தற்போதைய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளருமான 40 வயது டிம் பெய்னி ஆஸி. ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஏ அணியுடன் ஆஸ்திரேலியா ஏ அணி வரும் ஜூலை மாதத்தில் 4 நாள் ஆட்டம் கொண்ட 2 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
அடுத்ததாக செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவுடன் சிவப்பு, வெள்ளைப் பந்து போட்டிகளில் ஆஸி. ஏ அணி விளையாட இருக்கிறது.
இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனும் அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் தொடக்கத்தில் விளையாடும் ஆஸி. ஏ அணிக்கும் டிம் பெய்னி தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார்.
இதற்கு முன்பாக ஆஸி. ஏ அணிக்கு துணை பயிற்சியாளராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
டிம் பெய்னியுடன் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆடம் கிரிஃபித் இணைந்துள்ளார்.
ஆஸி. ஏ அணி: ஜோல் கர்டிஸ், ஹாரி டிக்ஷன், ஜணன்டன் ஜெ, கம்பெல் கெல்லவே, அங்குஸ் லவெல், ரஃபேல் மக்மிலன், ஆலி பீக்கி, லியோட் போப், நிவேதன் ராதாகிருஷ்ணன், ஜேசன் சங்கா, லியாம் ஸ்கௌட், லச்லான் ஷா.