செய்திகள் :

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

post image

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களுடன் இன்று (ஜூன் 20) நடைபெற்ற சந்திப்பில் பேசிய அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, சுமார் 47 நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட தலைவருக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.

இதில், பெரும்பாலான கணக்குகள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

”அந்த வலைதள கணக்குகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் பதிவுகளில் எந்தவொரு ஈடுபாடும் காட்டவில்லை. அந்த கணக்குகள், ஒரு குறிப்பிட்ட தலைவர் மற்றும் அசாம் மாநில காங்கிரஸின் செயல்பாடுகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன” என்று அவர் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்தக் கணக்குகள், பாலஸ்தீனம், ஈரான் ஆகிய நாடுகளையும் மற்றும் வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் என்பவரையும் ஆதரித்து இஸ்லாமிய அடிப்படைவாதப் பதிவுகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், முதல்வர் சர்மா, அந்த காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் குறிப்பிடுவது கடந்த சில நாள்களுக்கு முன்பு அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ் கோகோய்தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வரும் 2026 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், முதல்முறையாக அம்மாநில அரசியலில் வெளிநாடுகளின் ஈடுபாடு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்றும் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார்.

இதையும் படிக்க:தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரளத்தில் பெண் தற்கொலை: 3 பேர் கைது

வடக்கு கேரள மாவட்டத்தில் 40 வயதுடைய பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், பினராயி கிராமத்தில் ரசினா(40) ஜூன் 17 ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடந்தார். ச... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 223 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 223 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11:50 மணி நிலவரப்படி 204 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சிவில் மருத்துவமனை கண்க... மேலும் பார்க்க

நன்றி! ஆனால்... டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது பற்றி மோடி கூறியதென்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட... மேலும் பார்க்க

தில்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.... மேலும் பார்க்க

மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க