செய்திகள் :

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகல்; அணியின் கேப்டன் யார்?

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

டெம்பா பவுமா விலகல்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் டெம்பா பவுமா ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகுகிறார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. அவரது காயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆராய ஸ்கேன் செய்யப்படவுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேசவ் மகாராஜ் அணியை கேப்டனாக வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அனுபவமற்ற இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும்: முன்னாள் வீரர்கள்

ஜெய்ஸ்வால் சதம், ஷுப்மன் கில் அரைசதம்; இந்தியா வலுவான தொடக்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான தொடக்கத்தைத் தந்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (ஜூன் 20) தொடங்கியது. ... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா கருண் நாயர்?

இந்திய அணி வீரர் கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (ஜூன் 20) தொடங்கிய... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்த சாய் சுதர்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று (... மேலும் பார்க்க

அனுபவமற்ற இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும்: முன்னாள் வீரர்கள்

இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளு... மேலும் பார்க்க

இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் வெற்றிகரமாக செயல்படுவார்: அஜிங்க்யா ரஹானே

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்படுவார் என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணி விவரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன்... மேலும் பார்க்க