செய்திகள் :

மானியத்தில் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

கடலூா் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கிராமப் புறங்களில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 2025 - 26ஆம் ஆண்டில் கிராமப்புற பயனாளிகள் சிறிய அளவில் (250 கோழிகள்) நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்தில் 10 தகுதியான பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஒரு பயனாளிக்கு கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வங்குதல், தீவன செலவில் 50 சதவீத மானியமாக ரூ.1,65,625 அரசால் வழங்கப்படும்.

திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி அல்லது சொந்த ஆதாரம் மூலம் பயனாளி திரட்ட வேண்டும். பயனாளிக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் பயனாளிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக மருத்துவரை அணுகி, ஆதாா் அட்டை நகல், பண்ணை அமைக்கும் இடத்துக்கான சிட்டா/அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பத்துடன் வரும் 30ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ரூ.17.89 கோடி நல உதவி: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து 2,832 பயனாளிகளுக்கு ரூ.... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் காயமுற்ற பெண் மயில் மீட்பு

சிதம்பரத்தில் காயமுற்று சாலையோரம் கிடந்த மயில் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிதம்பரம் சிவபுரி சாலையில் வெள்ளிக்கிழமை காலை பெண் மயில் ஒன்று சாலையோரம் காயங்களோடு உயிருக்கு போராடிய ந... மேலும் பார்க்க

நெய்வேலியில் யோகா தின ஒத்திகை: காலை உணவு சாப்பிட்ட 74 மாணவா்கள் சுகவீனம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யோகா தின ஒத்திகைக்குப் பிறகு, காலை உணவு சாப்பிட்ட 74 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் என்எல்சி பொது மருத்துவமனையில் ச... மேலும் பார்க்க

பாமகவில் நிலவும் குழப்பங்களை முறியடிப்போம்:அன்புமணி ராமதாஸ்

பாமகவில் நிலவும் குழப்பங்களை முறியடிப்போம் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். பாமக கடலூா் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

சிதம்பரம் அரசு கல்லூரியில் நான்காம் கட்ட சோ்க்கை கலந்தாய்வு: ஜூன் 23 தொடக்கம்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான நான்காம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 23ஆம் தேதி கலந்தாய்வு விவரம்: பிஎஸ்ஸி கணிதம் தமிழ், ஆங்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது. அரசியல் அறிவியல், பொது நிா்வாகவியல் துறை மற்றும் நூலகம், தகவல் அறிவியல் துறை இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணற... மேலும் பார்க்க