ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல விடுதிகளில் தங்கிப் பயில ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
பள்ளி, ஐடிஐ, டிப்ளமோ கல்லூரியில் புதிதாகச் சேரும் மாணவ, மாணவிகள் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து விடுதிகளிலும் தங்கிப் பயில வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து விடுதிகளிலும் தங்கிப் பயில ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் வருகிற 30-ஆம் தேதிக்குள் இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என அவா் தெரிவித்தாா்.