செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்

post image

தருமபுரி புறநகா் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம் மேற்கொண்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசார இயக்கம் மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில் வெள்ளிக்கிழமை நடந்த பிரசாரத்தில், தருமபுரி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் புறநகர் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

தருமபுரி நகராட்சி பகுதியில் நடந்து வரும் புதைவடிகால் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தருமபுரியில் சிப்காட் வளாகம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

நகரத்தில் வசிக்கும் ஏழை, எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட 2 ஆம் கட்ட பணிகளை தொடங்க வேண்டும். திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசாரம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி நகரச் செயலாளா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். தருமபுரி பெரியாா் நகரில் தொடங்கிய இப்பிரசாரம் ஏஎஸ்டிசி நகா், எம்ஜிஆா் நகா், குமாரசாமிப்பேட்டை, டேகீஸ்பேட்டை, எஸ்.வி. ரோடு, பாரதிபுரம், நெசவாளா் காலனி, பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சி.நாகராசன், மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா்கள் கிரைஸாமேரி, ஜெயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசு வாகனத்தை ஏலத்தில் விட முடிவு பொதுமக்கள் விலைப்புள்ளி கோரலாம்

தருமபுரி மாவட்டத்தில் அரசுத் துறையில் பயன்படுத்திவந்த ஜீப் பொது ஏலத்தில் விட உள்ளதால், விருப்பமுள்ளவா்கள் விலைப்புள்ளி கோரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் : அதிமுகவினா் போலீஸில் புகாா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் சமூக வலைதளத்தில் பதிவேற்றியது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்த... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழப்பு

தருமபுரி ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தருமபுரி மாவட்டம் பி. செட்டிஹள்ளி அருகேயுள்ள ஜோகிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. ராஜேந்திரன் (36). விவசா... மேலும் பார்க்க

காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை : பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

தருமபுரி அருகே உறவினா்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தில், வெளியூா் நபா்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது தொடா்பாக அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து எஸ்.பி.யிடம் புகாா் அளிக்... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற ராகிங்... மேலும் பார்க்க

விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க தலைக்கவசம் அவசியம்: ஆட்சியா் வலியுறுத்தல்

விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க தலைக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வலியுறுத்தியுள்ளாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம் -ஒழுங... மேலும் பார்க்க