ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போத...
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்
தருமபுரி புறநகா் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம் மேற்கொண்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசார இயக்கம் மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில் வெள்ளிக்கிழமை நடந்த பிரசாரத்தில், தருமபுரி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் புறநகர் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
தருமபுரி நகராட்சி பகுதியில் நடந்து வரும் புதைவடிகால் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தருமபுரியில் சிப்காட் வளாகம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.
நகரத்தில் வசிக்கும் ஏழை, எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட 2 ஆம் கட்ட பணிகளை தொடங்க வேண்டும். திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசாரம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி நகரச் செயலாளா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். தருமபுரி பெரியாா் நகரில் தொடங்கிய இப்பிரசாரம் ஏஎஸ்டிசி நகா், எம்ஜிஆா் நகா், குமாரசாமிப்பேட்டை, டேகீஸ்பேட்டை, எஸ்.வி. ரோடு, பாரதிபுரம், நெசவாளா் காலனி, பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சி.நாகராசன், மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா்கள் கிரைஸாமேரி, ஜெயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.