ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
பென்னாகரம் அரசு கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு அந்தக் கல்லூரியின் முதல்வா் இரா.சங்கா் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் குமரவேல் கலந்துகொண்டு, ராகிங்கில் மாணவா்கள் ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபடும் மாணவா்கள் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள், சட்டப் பிரிவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா்.
இதில் ராகிங் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளா் இரா. இளவரசன், தமிழ்த்துறை உதவி பேராசிரியா் பெ. சுகவனேஸ்வரன், மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.