தனது மருத்துவ சோதனை முடிவுகளை வெளியிட்ட திருநங்கை வீராங்கனை அனயா பங்கர்; BCCI, I...
நிலுவையில் கொலை வழக்கு; காதலித்த சிறுமி; உறவினர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு - திருச்சி பரிதாபம்
கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள மொஞ்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த 17 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவருக்கும், திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள வாளையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (25) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் பின்னர் நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு பேரும் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதில், பழனிச்சாமி மீது தனது சொந்த சகோதரரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சிறுமி தனது காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்து உள்ளார். அதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுமி, பழனிச்சாமியை திருமணம் செய்ய ஏதுவாக வீட்டை விட்டு சென்றதாக சொல்லப்படுய்கிறது.
பின்னர், இருவரும் திருமணம் செய்துகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், சிறுமிக்கு18 வயது நிரம்பாததால் திருமண செய்துகொள்ளமுடியாமல் போயிருக்கிறது. அதன் பின்னர் சிறுமியை அவரது பெற்றோர் மீண்டும் கரூருக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சிறுமி தனது காதலனை தேடி வாழையூர் வந்தார். மாலையில் அங்குள்ள காட்டுப் பகுதியில் பழனிச்சாமியும், சிறுமியும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே, அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு பேரையும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். பழனிச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து சிறுகனூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் சிறுமி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.