செய்திகள் :

தென்காசி: வீட்டில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

post image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 வார்டுகள் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இந்த 2025-26 நிதியாண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வசூல் பணி மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சிலர் செங்கோட்டை மேலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றபோது, அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்ததாக கூறப்பட்டது.

வரிவசூல் மேற்பார்வையாளர் அனந்தராமகிருஷ்ணன்

கடந்த 12 ஆம் தேதி செங்கோட்டை மேலூர் பகுதியில் வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வசூல் பணி மேற்பார்வையாளர் அனந்தராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் சிலர் சென்றிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண் குளித்துக் கொண்டிருந்ததை அறிந்த அனந்த ராமகிருஷ்ணன் தனது செல்போனில் பெண்ணை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

வீடியோ எடுப்பதை பார்த்த அப்பெண் கூச்சலிட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஊழியர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக நகராட்சி ஆணையரிடம் 13 ஆம் தேதி அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி ஆணையாளர் புனிதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பேசினோம்.

செங்கோட்டை நகராட்சி

நகராட்சி ஆணையாளர் கூறுகையில் "இந்தச் சம்பவம் நடந்ததாக எனக்கு அந்தப் பெண் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் நான் நகராட்சி பொறியாளர் கண்ணன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து இருதரப்பினரிடையும் விசாரணை நடத்தியதில், வரி வசூல் மேற்பார்வையாளரான அனந்தராமன் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விசாரணை 18 ஆம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து அனந்த ராமகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும் சட்டரீதியாக அதனை விசாரணை செய்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விசாரணை நடத்தி உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளேன்" என கூறினார்.

கரூர்: காதல் திருமணம் செய்த இளஞ்ஜோடி; வீட்டுக் காவலில் மணமகன்; மணப்பெண் கண்ணீர்; பின்னணி என்ன?

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சதயவர்த்தினி (வயது: 19). இவரும், தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது: 21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து... மேலும் பார்க்க

தென்காசி: விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீர் மரணம்; நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம் வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் மற்றும் புனிதா தம்பதி. இவர்களுடைய இரண்டரை வயது ஆண் குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு தனது தாயுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.அப்போது திட... மேலும் பார்க்க

நிலுவையில் கொலை வழக்கு; காதலித்த சிறுமி; உறவினர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு - திருச்சி பரிதாபம்

கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள மொஞ்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த 17 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவருக்கும், திருச்சி மணச்சநல... மேலும் பார்க்க

கரூர்: 'ரௌடியை பிடிக்க முயன்ற போலீஸ்; தாக்கிவிட்டு ஓடியதால் சுட்டுப் பிடிப்பு!' - நடந்தது என்ன?

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்த பென்சில் தமிழழகன்(வயது: 30). இவர்மீது கரூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பல பதிவாகியுள்ளன. இதனால் இவர் ரௌடி பட்ட... மேலும் பார்க்க

கோவை அரபிக் கல்லூரி மூலம் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: மேலும் 4 பேர் கைது - பின்னணி என்ன?

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இ... மேலும் பார்க்க

திருப்பூர்: செல்போனில் கேம் விளையாடியதை எச்சரித்த தாய்; சிறுவன் எடுத்த விபரீத முடிவு; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார். பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் தனது தந்தை அல்லது தாயின்... மேலும் பார்க்க