செய்திகள் :

கோவை அரபிக் கல்லூரி மூலம் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: மேலும் 4 பேர் கைது - பின்னணி என்ன?

post image

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

கோவை கார் வெடி குண்டு சம்பவம்

இதனிடையே தீவிரவாத திட்டத்துக்கு சதித்திட்டம் தீட்டுவது, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு அங்குள்ள அரபி கல்லூரியை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக என்ஐஏ, அரபி கல்லூரியில் சோதனை  நடத்தி தனி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கல்லூரி நிறுவனர் ஜமீல் பாஷா, இர்ஷத், சையத் அப்துர் ரஹ்மான், முகமது உசைன் ஆகிய 4 பேரை என்ஐஏ கைது செய்திருந்தனர்.

என்.ஐ.ஏ - தேசிய புலனாய்வு முகமை

இவர்கள் அங்கு வரும் மாணவர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்தது. விசாரணையில் கல்வி நிறுவனம் போல செயல்பட்டு தமிழ்நாடு முழுவதும் நெட்வொர்க்கை விரிவு செய்து, தீவிரவாத செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் அகமத் அலி, ஜவகர் சாதிக், ராஜா அப்துல்லா, ஷேக் தாவூத் ஆகிய 4 பேரை என்ஐஏ நேற்று இரவு கைது செய்துள்ளது. இதில் அகமது அலி அரபிக் கல்லூரியின் முதல்வராக செயல்பட்டு வந்தவர் ஆவார். அவர்களிடம் கோவை காவலர் பயிற்சி மையமான பிஆர்எஸ் வளாகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தார்கள்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

விசாரணை முடிவில் அவர்கள் 4 பேரை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருப்பூர்: செல்போனில் கேம் விளையாடியதை எச்சரித்த தாய்; சிறுவன் எடுத்த விபரீத முடிவு; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார். பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் தனது தந்தை அல்லது தாயின்... மேலும் பார்க்க

கோவை: புலம்பெயர் தொழிலாளிகளை மிரட்டி பணம் பறிப்பு; ஆட்டோ ஓட்டுநர்கள் கைதின் பின்னணி என்ன?

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். உத்தரப்பிரதேச... மேலும் பார்க்க

``கோயில், குளம் என சுற்றுகிறாள், சரியாக கவனிக்கவில்லை ஆத்திரத்தில்..'' - மகளை கொன்ற 78 வயது தந்தை

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவரது பராமரிப்பில் அவரது தந்தை வேலு இருந்து வந்துள்ளா... மேலும் பார்க்க

திருப்பூர்: போலி ஆதார் அட்டையுடன் தங்கியிருந்த 26 வங்கதேசத்தினர் கைது; பின்னணி என்ன?

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாகப் பின்னலாடை வர்த்தகத்தில் வங்கதேசம் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் துறையாக பின்னலாடைத் துறை விளங்கி வருகிறது.இருந்தாலும், போதிய ஊதியம் கிடைக்காததால்... மேலும் பார்க்க

தேனிலவில் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற சோனம்; 3 மொபைல்கள் எங்கே? விசாரணையில் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனம் என்ற பெண் கடந்த மாதம் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். சென்ற இடத்தில் கூலிப்படையின் துணையோடு கணவனை கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கிப்போட்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குடும்பப் பிரச்னை; இரு பேத்திகளை கொன்றுவிட்டு, விபரீத முடிவெடுத்த மூதாட்டிகள்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28). கடந்த 9 வருடங்களுக்கு முன்பு கர... மேலும் பார்க்க