டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 அறிமுகம்..! சிறப்பம்சங்கள் என்ன?
கோவை அரபிக் கல்லூரி மூலம் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: மேலும் 4 பேர் கைது - பின்னணி என்ன?
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே தீவிரவாத திட்டத்துக்கு சதித்திட்டம் தீட்டுவது, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு அங்குள்ள அரபி கல்லூரியை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக என்ஐஏ, அரபி கல்லூரியில் சோதனை நடத்தி தனி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கல்லூரி நிறுவனர் ஜமீல் பாஷா, இர்ஷத், சையத் அப்துர் ரஹ்மான், முகமது உசைன் ஆகிய 4 பேரை என்ஐஏ கைது செய்திருந்தனர்.

இவர்கள் அங்கு வரும் மாணவர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்தது. விசாரணையில் கல்வி நிறுவனம் போல செயல்பட்டு தமிழ்நாடு முழுவதும் நெட்வொர்க்கை விரிவு செய்து, தீவிரவாத செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் அகமத் அலி, ஜவகர் சாதிக், ராஜா அப்துல்லா, ஷேக் தாவூத் ஆகிய 4 பேரை என்ஐஏ நேற்று இரவு கைது செய்துள்ளது. இதில் அகமது அலி அரபிக் கல்லூரியின் முதல்வராக செயல்பட்டு வந்தவர் ஆவார். அவர்களிடம் கோவை காவலர் பயிற்சி மையமான பிஆர்எஸ் வளாகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தார்கள்.




விசாரணை முடிவில் அவர்கள் 4 பேரை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.