செய்திகள் :

நித்யானந்தா எங்கு உள்ளார்? நீதிமன்றம் கேள்வி

post image

மதுரை: நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? என மதுரை உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.

மதுரை ஆதீனத்துக்குள் நுழைவது தொடர்பான உத்தரவுக்கு எதிராக நித்யானந்தா சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற அமர்வு, நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? பாஸ்போர்ட், விசா உள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

இதற்கு, நித்யானந்தா கைலாசாவில் உள்ளார். ஆஸ்திரேலியா அருகே கைலாசா உள்ளது. யுஎஸ்கே என்ற நித்யானந்தா இருக்கும் நாடு ஐ.நா. அவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நித்யானந்தாவின் சீடர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையக் கூடாது என்று தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், புதிய வழக்குரைஞரை நியமிக்க கோரியதற்கு, மதுரை அமர்வு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவ... மேலும் பார்க்க

பெண் கோட்டாட்சியர் விபத்தில் பலி: ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை, ரூ. 15 லட்சம் நிதியுதவி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பலியான முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நடை... மேலும் பார்க்க

மருத்துவமனை அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் கார... மேலும் பார்க்க

அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா பலியானார்.திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஒ.) ஆராவமுத தேவசேனா பணியாற்றி வந்தார்.இந்நில... மேலும் பார்க்க