செய்திகள் :

அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!

post image

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா பலியானார்.

திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஒ.) ஆராவமுத தேவசேனா பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூன் 19) சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஆர்.டி.ஓ. அரசு ஜீப் மூலம் குளித்தலை வழியாக திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இன்று பகல் சுமார் 12 மணி அளவில் முக்கொம்பு அருகே வந்தபோது எதிரே கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக ஆர்டிஓ பயணித்த அரசு ஜீப் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அரசு ஜீப் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி பலத்த சேதமடைந்தது. இதனால், ஜீப்புக்குள் சிக்கிய கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த விரைந்து சென்ற ஜீவபுரம் போலீஸார், ஜீப்புக்குள் சிக்கிய ஆர்டிஓ உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அரசு ஜீப் டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பெண் ஆர்டிஓ சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அரசு அலுவலர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவ... மேலும் பார்க்க

பெண் கோட்டாட்சியர் விபத்தில் பலி: ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை, ரூ. 15 லட்சம் நிதியுதவி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பலியான முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நடை... மேலும் பார்க்க

மருத்துவமனை அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் கார... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 19) ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க