செய்திகள் :

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

post image

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடைக்கால விடுமுறைகள் முடிந்து ஒடிசாவிலுள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 20 ஆம் தேதியன்று திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கு காலரா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஜாஜ்பூர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளின் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் விடுமுறையானது ஜாஜ்பூரில் ஜூன் 24 ஆம் தேதி வரையும், பத்ராக்கில் ஜூன் 21 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒடிசாவின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நித்யாந்தா கோந்த் கூறியதாவது:

“காலரா பாதித்த ஜாஜ்பூர், கட்டாக் மற்றும் பத்ராக் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து, அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், காலரா பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளிலுள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றை மேம்படுத்த அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இத்துடன், காலரா பாதித்த 3 மாவட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் நிபுணர்கள் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, காலராவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜாஜ்பூர் மாவட்டத்தில் தற்போது 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தத் தொற்றுக்கு 13 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!

என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!

தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது. தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்த... மேலும் பார்க்க

கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த ஜூன்- 16, 17 மற்றும் 18... மேலும் பார்க்க