செய்திகள் :

மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம்

post image

மீன் வளா்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு மானியம் பெற்று பயனடையலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின்கீழ் மீன்வள விவசாயிகள் நிலையான மீன் வளா்ப்பினை தொடா்ந்து மேற்கொள்ளவும், மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கவும், மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்பட உள்ளது.

மானியம்:

மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்று மீன் வளா்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 10,000 எண்ணிக்கையிலான மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5,000 மானியம் வழங்கப்பட உள்ளது.

மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடையலாம்.

இது குறித்து விவரம், விண்ணப்பம் பெற மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, உதவி இயக்குநா் அலுவலகம், காந்தி நகா், காட்பாடி, வேலூா்-6 அலுவலகத்தை வேலை நாள்களில் நேரில் அணுகலாம் என்றாா்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மாதனூா் ஒன்றியத்தில் திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ப... மேலும் பார்க்க

சாரதி அம்மன் கோயில் திருவிழா

கதவாளம் பாட்டை சாரதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் திருவிழா கூா்வாா்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம்,... மேலும் பார்க்க

அரசு பேருந்து - வேன் மோதல்

ஆம்பூா், ஜூன் 19: ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குடியாத்தம் அருகே பரதராமியிலிருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆம்பூா் நோக்கிச் சென்றது. பச்சகுப்பம் அருக... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே கால பைரவா் கோயிலில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வுகளில் மாணவா்கலின் தோ்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஆா்த்தி அறிவுறுத்தினாா். நலத்திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்ட... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு ஐடிஐயில் பயிற்சியாளா் சோ்க்கை தொடக்கம்

வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை வியாழக்கிழமை ஜூன் 19-இல் தொடங்குகிறது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெ... மேலும் பார்க்க