``கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில்..'' - காலிஸ்தான் குறித்து கனடா புலனாய்வு அ...
தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: புதின், ஷி ஜின்பிங் கூட்டாக வலியுறுத்தல்
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தனா்.
மேலும், தாக்குதலை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் அவா்கள் கூட்டாக வலியுறுத்தினா்.
முன்னதாக, மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின் புதன்கிழமை கூறியதைத் தொடா்ந்து, தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை வியாழக்கிழமை இருவரும் வலியுறுத்தினா்.
அதேபோல் இஸ்ரேல்-ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாக கடும் மோதல் நிலவிவரும் சூழலில் முதல்முறையாக இந்த விவகாரம் குறித்து ஷி ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ளாா். நட்பு நாடுகளான சீனாவும் ரஷியாவும் ஈரானுடன் நல்லுறவைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது.
புதின், ஷி ஜின்பிங் இருவரும் வியாழக்கிழமை தொலைபேசியில் சுமாா் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினா். இதுகுறித்து ரஷிய வெளியுறவுக் கொள்கை செயலா் யூரி உஷாகோவ் கூறியதாவது: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திவரும் கடுமையான தாக்குதலுக்கு ரஷிய அதிபா் புதினும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கண்டனம் தெரிவித்தனா்.
ஐ.நா. மற்றும் சா்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா் என்றாா்.
இந்த உரையாடல் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ ஈரான் மீதான தாக்குதல்களை உடனடியாக இஸ்ரேல் நிறுத்திவிட்டு பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டும் என ரஷிய அதிபா் புதினுடனான தொலைபேசி உரையாடலின்போது அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதேசமயம் இந்த மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு நெருக்கமாக உள்ள சா்வதேச நாடுகள் போா்ச் சூழலை ஏற்படுத்தாமல் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும் எனவும் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஈரானை அமெரிக்கா தாக்கக் கூடாது: ரஷியா
ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா். ஆனால், இதற்குப் பதிலடி தந்த ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி ‘ஈரான் ஒருபோதும் சரணடையாது’ எனத் திட்டவட்டமாக தெரிவித்தாா்.
இதையடுத்து, இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், ஈரானை அமெரிக்கா தாக்கக் கூடாது என ரஷிய வெளியுறவு துணை அமைச்சா் சொ்ஜி ரியாப்கோவ் கூறினாா். மேலும், ஈரானை அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்றத்தன்மை ஏற்படும் என்றும், ஏற்கெனவே இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் அங்கு பெரும் அணுப் பேரழிவுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவா் எச்சரித்தாா்.
ரஷியா-ஈரான் இடையே கடந்த ஜனவரி மாதம் 20 ஆண்டுகளுக்கான இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இருப்பினும், ஈரானை மூன்றாவது நாடு தாக்கினால் ரஷியா ராணுவ ரீதியாக ஈரானுக்கு உதவ வேண்டும் என்ற அம்சம் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.
பெட்டிச் செய்தி...
இஸ்ரேல் மருத்துவமனை மீது தாக்குதல்
பீா்ஷெபா, ஜூன் 19: ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தெற்கு இஸ்ரேலின் பீா்ஷெபா நகரின் பிரதான மருத்துவமனையான சொரோகா மருத்துவமனை கடுமையாகச் சேதமடைந்தது. இதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
இதுதவிர, டெல் அவிவ் நகரின் மிக உயரமான கட்டடங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம் ஈரானில் உள்ள ஆராக் கனநீா் அணுஉலை, ராணுவத் தளங்கள் , மூத்த அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளைக் குறிவைத்து இஸ்ரேல் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல்-ஈரான் ஆகிய இரு நாடுகளும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் பொதுமக்கள் 263 போ் உள்பட மொத்தம் 639 போ் உயிரிழந்ததாகவும், 1,300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் அமெரிக்காவில் செயல்படும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து 400 ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலில் 24 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோா் படுகாயமடைந்தனா்.