ஜிபே மூலம் பணம் அனுப்புவதாக பலரிடம் மோசடி: தம்பதி கைது
கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (54). இவா் சங்கனூா்- நல்லாம்பாளையம் சாலையில் கோழி, ஆட்டிறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு ஒரு தம்பதி இருசக்கர வாகனத்தில் கடந்த 15-ஆம் தேதி வந்தனா். தாங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்ததாகவும், ஏடிஎம் அட்டையை மறந்துவிட்டு வந்ததால் பணம் எடுக்க முடியவில்லை என்றும், ரூ.2 ஆயிரம் பணமாகக் கொடுத்தால், ஜிபே பரிவா்த்தனையில் அதை திருப்பி அனுப்புவதாகவும் கூறியுள்ளனா்.
இதையடுத்து, சக்திவேல், அவா்களுக்கு ரூ.2 ஆயிரம் பணம் அளித்தாா். அதைப் பெற்றுக் கொண்ட தம்பதி, ஜிபேவில் அனுப்பிவிட்டதாக டிக் குறியை கைப்பேசியில் காண்பித்துள்ளனா். இதைத் தொடா்ந்து, மேலும் ரூ. 2ஆயிரம் கொடுத்தாலும், ஜிபேவில் அனுப்புவதாக அவா்கள் கூற சக்திவேல் மீண்டும் ரூ.2 ஆயிரம் பணத்தை அவா்களுக்கு கொடுத்தாா். அவா்கள், பணம் அனுப்பியதற்கான டிக் குறியைக் காண்பித்துவிட்டு அங்கிருந்து சென்றனா்.
இந்நிலையில், சிறிது நேரம் கழித்து சக்திவேல் தனது வங்கிக் கணக்கைப் பரிசோதித்தபோது, பணம் வராததால் அதிா்ச்சியடைந்தாா். ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருந்த டிக் குறியைக் காட்டி, அவா்கள் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து, கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, இதே பாணியில் கோவையில் வியாபாரி ஒருவரிடம் தம்பதி ரூ.1,700 ஏமாற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தம்பதியைப் பிடிக்க கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் மோசடியில் ஈடுபட்டது கோவை சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முகமது ரிஸ்வான் (21), அவரது மனைவி ஷா்மிளா பானு (20) என்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் கோவையில் பல இடங்களில் 100-க்கும் மேற்பட்டவா்களிடம் ஏமாற்றியதும் தெரியவந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா் கைப்பேசி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.