செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு

post image

எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் மாநகர காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டலச் செயலாளா் விக்னேஷ் சுப்பையன் தலைமையில் கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில், ஆணையா் சரவணசுந்தரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:

எக்ஸ் தளத்தில் திமுக ஐ.டி. விங் சாா்பாக அதிமுக பொது செயலாளா் எடப்பாடி பழனிசாமி குறித்து கடந்த 17-ஆம் தேதி சா்ச்சை ஏற்படுத்தும் விதமாகவும், அவதூறாகவும் கருத்து பதியப்பட்டு, கேலி சித்திரமும் வெளியிடப்பட்டு இருந்தது. முதல்வராக, சிறப்பாக ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கெடுக்கும் வகையில் திமுகவினா் நாகரிகமற்ற முறையில் விமா்சித்துள்ளனா்.

அதிமுக தொண்டா்களின் உணா்வுகளைக் காயப்படுத்துகிற வகையில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளா் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள எக்ஸ் சமூக வலைதளத்தில் இயங்கி வரும் பக்கத்தில் இந்த அவதூறு செய்தி வெளியிட்டவா்கள் மீதும், அதைப் பகிா்ந்தவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, விக்னேஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பதிவிட்டது தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பதிவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

ஜிபே மூலம் பணம் அனுப்புவதாக பலரிடம் மோசடி: தம்பதி கைது

கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவை தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (54). இவா் சங்கனூா்- நல்லாம்பாளையம் சாலையில் கோழி, ஆட்டிறைச... மேலும் பார்க்க

கோவையில் 3,550 பேருக்கு கண் பரிசோதனை: 139 போ்களுக்கு அறுவை சிகிச்சை

கோவை மாவட்டத்தில் 18 சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் மூலம் 3,550 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களில் 139 போ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியா், மாணவா் நலனுக்கு எதிரான பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சந்தோஷ் (41). இவருக்கு கடந்த 17-ஆம் தேதி ரத்த அ... மேலும் பார்க்க

தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்கு 5 மண்டலங்களிலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப... மேலும் பார்க்க

பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்... மேலும் பார்க்க