செய்திகள் :

இது வெறும் 5% தாக்குதல் மட்டுமே! இஸ்ரேலுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை!

post image

இஸ்ரேலுடனான போரில் குறைந்தளவிலான பலத்தையே செலுத்தியிருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இஸ்ரேலுடனான போரில் குறைந்தளவிலான பலத்தையே செலுத்தி வருவதாக ஈரான் காவல்படை மூத்த தளபதி மோசென் ரெஸேய் கூறினார்.

தொலைக்காட்சி நேர்காணலில் மோசென் பேசுகையில், இஸ்ரேலுடனான போரில், ஈரானின் ராணுவத் திறனில் 30 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மோதலில் ஈரானின் மொத்தத் திறனில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எங்களின் அனைத்து ஆயுதங்களையும் நாங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை. கடற்படை, எங்களின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் திறன்களைக்கூட நாங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை.

தற்போதைய நிலையில், போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டால், அது இஸ்ரேலின் மறுசீரமைப்பு மற்றும் மீண்டுமொரு தாக்குதலை உருவாக்கும். மேலும், பலவீனமான எதிரியை மீண்டும் எழுப்பி விடும். தேவைப்பட்டால், ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த ஈரான் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் உறுதியளித்ததாக மோசென் கூறினார்.

இருப்பினும், பாகிஸ்தான் உறுதிகூறியதாக பாகிஸ்தான் அதிகாரிகளோ அறிக்கைகளோ எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

ஆனால், ஜூன் 14 ஆம் தேதியில் நடைபெற்ற தேசிய பேரவையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசுகையில், ஈரான், யேமன், பாலஸ்தீனத்தை இஸ்ரேல் குறிவைத்துள்ளது. முஸ்லிம் நாடுகள் இப்போது ஒன்றிணையவில்லை என்றால், அவர்கள் அனைவரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறிக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்திய கவாஜா, கூட்டுறவை உருவாக்குமாறு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு அழைப்பும் விடுத்தார்.

ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்தத் தாக்குதலில் ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க:இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

கிரீஸ்: 2 மீன்பிடி படகுகளில் வந்த 600 அகதிகள் மீட்பு!

கிரீஸ் நாட்டின் தென்கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர். கிரீஸின் தெற்குப் பகுதியிலுள்ள கவ்டோஸ் தீவின் கடல்பகுதியி... மேலும் பார்க்க

ஈரானையே உலுக்கிய இஸ்ரேலின் பெண் உளவாளி! தடயமே இல்லாமல் மாயமான கதை!!

பல ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போலத்தான் ஈரானிலும் நடந்தது. ஈரானுக்குள் நுழைந்து முக்கிய தலைவர்கள், உயர் அதிகாரிகளின் வீட்டுக்குள் நுழைந்த இஸ்ரேலின் பெண் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்ரேல்... மேலும் பார்க்க

நைஜர்: துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொலை! ராணுவம் தேடுதல் வேட்டை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.நைஜரின் மேற்குப் பகுதியில், மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளுடனான பகுதியில் ... மேலும் பார்க்க

ஒரே இரவில் உக்ரைனின் 61 ட்ரோன்களை வீழ்த்திய ரஷியா!

ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைனின் 61 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியாவின் பல்வேறு முக்கிய நகர... மேலும் பார்க்க

வாஷிங்டன் வந்த டூம்ஸ்டே விமானம்! யுஸ்-ஈரான் பதற்றத்தை அதிகரிக்கும் நைட்வாட்ச்!

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் நேரடியாக அமெரிக்கா களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அணுகுண்டுகளைத் தாங்கும் திறன்பெற்ற டூம்ஸ்டே விமானம் வாஷிங்டன் வந்திருப்பது பதற்றத்தை அதிகரித... மேலும் பார்க்க

வீதிகளெல்லாம் வாய்க்கால்கள்! ஆற்று வெள்ளம் சூழ்ந்த சீன நகரம்!

தெற்கு சீனாவில் உள்ள ஹுவாய்ஜி மாநகரில் பெய்த கனமழையால் வீதிகளில் வாய்க்கால் போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.குவாங்டாங் மாகாணத்தை தாக்கிய புயல் காரணமாக கடந்த புதன்கிழமை அதிகனமழை பெய்துள்ளது. குறிப... மேலும் பார்க்க