செய்திகள் :

ஒரே இரவில் உக்ரைனின் 61 ட்ரோன்களை வீழ்த்திய ரஷியா!

post image

ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைனின் 61 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவின் பல்வேறு முக்கிய நகரங்களின் வானில் உக்ரைன் ராணுவத்தின் ஆளில்லா ட்ரோன்கள் நேற்று (ஜூன் 19) இரவு 8 மணி முதல் (ரஷிய நேரப்படி) தாக்குதல் நடத்தும் நோக்கோடு சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ரஷிய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் இன்று (ஜூன் 20) காலை 7 மணி வரை உக்ரைனின் 61 ஆளில்லா ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரியோ மாகாணத்தில் - 22 ட்ரோன்களும், குர்ஸ்க் - 14, பெல்கோரொட் - 7, வொரோனெஸ் - 5, வோல்கோகிராட், துலா, ரொஸ்டோவ் மற்றும் பிரயன்ஸ்க் ஆகிய மாகாணங்களில் தலா 3 ட்ரோன்களும், மாஸ்கோவ் மீது ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளில், எந்தவொரு உயிர் அல்லது பொருள் சேதங்கள் ஏற்படவில்லை என அம்மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால், உக்ரைன் எப்போது வெளிநாடுகளிடம் இருந்து ராணுவ உதவிகள் பெறுவதை நிறுத்துகின்றதோ அப்போதுதான் போர்நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என ரஷியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:வாஷிங்டன் வந்த டூம்ஸ்டே விமானம்! யுஎஸ்-ஈரான் பதற்றத்தை அதிகரிக்கும் நைட்வாட்ச்!

ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி ... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்யா தியாகி என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி உயர் படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் கடந்த ஜூன் 17ஆம் த... மேலும் பார்க்க

கிரீஸ்: 2 மீன்பிடி படகுகளில் வந்த 600 அகதிகள் மீட்பு!

கிரீஸ் நாட்டின் தென்கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர். கிரீஸின் தெற்குப் பகுதியிலுள்ள கவ்டோஸ் தீவின் கடல்பகுதியி... மேலும் பார்க்க

ஈரானையே உலுக்கிய இஸ்ரேலின் பெண் உளவாளி! தடயமே இல்லாமல் மாயமான கதை!!

பல ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போலத்தான் ஈரானிலும் நடந்தது. ஈரானுக்குள் நுழைந்து முக்கிய தலைவர்கள், உயர் அதிகாரிகளின் வீட்டுக்குள் நுழைந்த இஸ்ரேலின் பெண் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்ரேல்... மேலும் பார்க்க

நைஜர்: துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொலை! ராணுவம் தேடுதல் வேட்டை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.நைஜரின் மேற்குப் பகுதியில், மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளுடனான பகுதியில் ... மேலும் பார்க்க

வாஷிங்டன் வந்த டூம்ஸ்டே விமானம்! யுஸ்-ஈரான் பதற்றத்தை அதிகரிக்கும் நைட்வாட்ச்!

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் நேரடியாக அமெரிக்கா களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அணுகுண்டுகளைத் தாங்கும் திறன்பெற்ற டூம்ஸ்டே விமானம் வாஷிங்டன் வந்திருப்பது பதற்றத்தை அதிகரித... மேலும் பார்க்க