செய்திகள் :

நன்றி! ஆனால்... டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது பற்றி மோடி கூறியதென்ன?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திப்பதற்காகவும், ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முடிவு எட்டப்படவும், எதுவும் குறிப்பிடாமல் திடீரென மாநாட்டில் இருந்து வெளியேறினார். இதனால், பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் சந்திக்க முடியாமல் போனது.

அதிபர் டிரம்ப்பிடம் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியிருந்த பிரதமர் மோடி, “போர் நிறுத்தத்தில் யாருடைய சமரசத்தையும் இந்தியா ஏற்காது” எனத் தெரிவித்திருந்தார். மேலும், அமெரிக்கா வரக் கூறிய டிரம்ப்பின் அழைப்பையும் நிராகரித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று(ஜூன் 20) காலை பிகாரின் சிவானில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மோடி, ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “புனிதமான மஹா பிரபுவின் இடமான ஒடிசாவுக்கு திரும்புவதற்காகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்து இங்கு வந்திருக்கிறேன்.

இரண்டு நாள்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்தேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நீங்கள் கனடா வந்திருப்பதால் வாஷிங்டன் வாருங்கள். இவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிடுவோம் என்றார்.

உங்கள் அழைப்புக்கு நன்றி. ஆனால், நான் அவரிடம் கூறினேன். எனக்கு மஹாபிரபுவின் இடத்தில் வேலை இருக்கிறது. மஹா பிரபுவின் மீதான பக்தியும் அன்பும் மட்டுமே என்னை இங்கு அழைத்து வந்திருக்கின்றன” எனக் கூறினார்.

ஒடிசாவில் பாஜகவின் முதல் அரசின் முதலாமாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடந்தாண்டு பாஜக ஆட்சியமைத்த பின்னர் 6-வது முறையாக ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு குடிநீர், சுகாதாரக் கட்டமைப்புகள், நகர்ப்புறச் சாலைகள், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட ரூ.18,600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்க... ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

கேரளத்தில் பெண் தற்கொலை: 3 பேர் கைது

வடக்கு கேரள மாவட்டத்தில் 40 வயதுடைய பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், பினராயி கிராமத்தில் ரசினா(40) ஜூன் 17 ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடந்தார். ச... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 223 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 223 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11:50 மணி நிலவரப்படி 204 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சிவில் மருத்துவமனை கண்க... மேலும் பார்க்க

தில்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.... மேலும் பார்க்க

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். பத்த... மேலும் பார்க்க

மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க