செய்திகள் :

கோடியூர்: வாரச்சந்தை நடைபெறும் இடத்துக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள்; முகம் சுளிக்கும் பொதுமக்கள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள கோடியூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் வாரச் சந்தை, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்களுக்கு முக்கிய இடமாக உள்ளது. ஆனால், இந்தச் சந்தையின் பின்புறம் மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைக் குவியல்கள் ஆகியவை குவிந்து கிடப்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் என அனைவரும் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்கின்றனர். இதனால், சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மூக்கைப் பிடித்தபடி உணவுப் பொருள்கள் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கேட்டபோது, “நாங்கள் இங்கு குப்பைகளைக் கொட்டுவதில்லை. பிளாஸ்டிக் பொருள்களையும் பயன்படுத்துவதில்லை. சந்தைக்கு வரும் பெரும்பாலானோர் துணிப்பைகளுடன் வருகின்றனர். இங்கு இருக்கும் குப்பைகள் என்றால் வெங்காயத் தோல், காய்கறித் துண்டுகள் போன்றவை மட்டுமே. ஆனால், மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சி, மூட்டை மூட்டையாக குப்பைகள் எப்படி இங்கு வருகின்றன என்பது தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். ஒரு பக்கம் சந்தை நடக்க, மறுபக்கம் கழிவுகள் குவிந்தால், எப்படி வியாபாரம் செய்வது?

இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பு? இது எங்கள் வியாபாரத்தை முற்றிலும் பாதிக்கிறது. இந்தப் பிரச்னையைத் தடுக்க எச்சரிக்கைப் பலகைகள் வைத்தும், சிலர் பொறுப்பற்று எதையும் பொருட்படுத்தாமல் குப்பைகளைக் கொட்டுகின்றனர். ஜோலார்பேட்டை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல். ‘இதோ, அதோ’ என்று பதிலளித்து இழுத்தடிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இந்த இடத்தை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஜோலார்பேட்டை நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, “மருத்துவக் கழிவுகள் தொடர்பாக அருகிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். பொறுப்பற்று குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்போம். இந்த இடத்தை விரைவில் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறோம்” என்று கூறினார்கள்.

தூத்துக்குடி: சுட்டிக்காட்டிய விகடன்; விறுவிறுவென தொடங்கிய ரவுண்டானா பணிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையில் ரவுண்டானா அமைக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழக அரசின் ‘நமக்கு நாமே’ திட்டம் ரூ1 கோடியில் லாயிட்ஸ் சாலையை புதுப்பிக்க டிஆர்ஏ நிறுவனம் அடிக்கல்

சென்னை நகரை அழகுபடுத்தும் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமான ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு உதவிடும் வகையில் சென்னை நகரின் மிகவும் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஆர்ஏ 1 கோடி ரூபாய் செலவில் சர் வி.பி.... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து எதிரொலி; விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விமான பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள கட்டடங்களை நெறிப்படுத்தும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து... மேலும் பார்க்க

Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail

டிக்கெட் முன்பதிவா... வங்கி சம்பந்தமான ஏதேனும் விஷயமா... இப்படி எந்த விஷயத்திற்கு சென்றாலும், இந்தியாவில் முதலில் கேட்கப்படும் ஆவணம் 'ஆதார்'. ஆனால், எப்போதும் ஆதார் நம் கையில் இருக்கும் என்று சொல்ல மு... மேலும் பார்க்க

``முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்; ஸ்டாலின் பக்கம்தான் முருகன்..” - சேகர் பாபு

மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்... மேலும் பார்க்க

கேரளா: "பெட்ரோல் நிலைய கழிப்பறைகள் பொதுப் பயன்பாட்டுக்கு அல்ல" - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் பெட்ரோலிய வணிகர்கள் மற்றும் பல பெட்ரோல் நிலைய உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பானது, பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுப் பயன்பாட்டுக்கானதாக வகைப்படுத்துவதை எதிர்... மேலும் பார்க்க