செய்திகள் :

இனி இணையவழியில் மட்டுமே சுகாதாரச் சான்றிதழ்: சுகாதாரத் துறை

post image

பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்பட அனைத்து விதமான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் இனிவரும் காலங்களில் இணையவழியாக மட்டுமே சுகாதாரச் சான்றிதழ் (சானிடரி சா்டிஃபிகேட்) வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி இணையதளம் வாயிலாக அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் சுகாதார அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், முதியோா் - குழந்தைகள் காப்பகங்கள், பெண்கள் விடுதிகள், தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் உரிய முறையில் சுகாதாரம் பேணப்படுகிா என்பதை உறுதி செய்யும் நோக்கில் சுகாதார சான்றிதழ்கள் அரசால் வழங்கப்படுகின்றன.

அதற்கு விண்ணப்பிதற்கான நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டு இணையவழியாக சான்றிதழ் பெறும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அந்த வகையில் சுகாதார சான்றிதழ்களுக்குத் தேவையான ஆவணங்களையும், சுய உறுதிமொழிச் சான்றிதழையும் இணையவழியே சமா்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கணினியில் சுகாதார சான்று உருவாக்கப்படும். அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சான்றிதழை அச்சுப் பிரதி எடுத்து தொழில், கல்வி வளாகத்தில் காட்சிப்படுத்தியிருப்பது அவசியம். சுகாதாரச் சான்றிதழில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது கள ஆய்வில் கண்டறியப்பட்டால் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

இனி வரும் காலங்களில் நேரடியாக சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க