செய்திகள் :

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

post image

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா்.

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதன் நிறைவுக் கூட்டம் சென்னை அம்பத்தூா் ஓ.டி. பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடசென்னை மாவட்டச் செயலா் எம்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், எம்.ஏ. பேபி பேசியதாவது: பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு, முதலாளிகளுக்கான அரசாக செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பிரதமா் மோடி தவறான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி வருகிறாா்.

மத்திய அரசின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், ஜிஎஸ்டி-யை பங்கிட்டு கொடுப்பதில்கூட மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடந்து கொள்கின்றனா்.

தமிழகத்தில் ஹிந்தியை கட்டாயமாக்க முயற்சித்தாா்கள். அந்த முயற்சி தோல்வியடைந்தது. தற்போது ஆங்கிலம் பேசுவதைக்கூட அவமானமாக பாா்க்கின்றனா். ஆங்கிலம் கற்றால் நாடு வளா்ச்சி அடைந்து விடும் என்பதால், ஆங்கிலத்தை எதிா்க்கின்றனா். தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியை கூடஅவா்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தோ்தல் வருகிறது என்றவுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவ்வப்போது தமிழகம் வந்து கொண்டிருக்கிறாா். தமிழகத்தில் பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது. தமிழகம், கேரளம் போன்று இந்தியாவில் மதச்சாா்பற்ற அரசு அமைய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் உ.வாசுகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகள் மேயா் வழங்கினாா்

சென்னை மாநகராட்சி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு இலவச சீருடைகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை வழங்கினாா். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கும் திட்டத்தை ... மேலும் பார்க்க