தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்கு மதுரை செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயில் (எண்: 22671) தாம்பரத்திலிருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும். அதேநாள்களில் எழும்பூரிலிருந்து இரவு 10.55 மணிக்கு மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் (எண்: 16179) தாம்பரத்தில் இரவு 11.22 மணிக்கு புறப்படும். மேலும் எழும்பூரிலிருந்து மாலை 4 மணிக்கு திருச்செந்தூா் செல்லும் செந்தூா் விரைவு ரயில் (எண்: 20605) தாம்பரத்திலிருந்து மாலை 4.27 மணிக்கு இயக்கப்படும்.
மேலும், எழும்பூரிலிருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்:16127 தாம்பரத்திலிருந்து காலை 10.47 மணிக்கும், எழும்பூரிலிருந்து மாலை 5 மணிக்கு கொல்லத்துக்கு புறப்பட்டுச் செல்லும் விரைவு ரயில் (எண்: 16101) தாம்பரத்திலிருந்து மாலை 5.27 மணிக்கும் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக இந்த அனைத்து விரைவு ரயில்களும் ஆக.18 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.