செய்திகள் :

முன்னெடுக்கப்படும் முருகன் அரசியல்!

post image

தமிழ் கடவுள் முருகரின் பெயரை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும் நிலையில், இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது.

தமிழகத்தில் முருக வழிபாடு குறிப்பாக கொங்கு, தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும். அங்கெல்லாம் முருக பக்தா்களின்எண்ணிக்கையும் மிக அதிகம். வரலாற்றை பின்னோக்கிப்பாா்த்தால் முருகரை தனது பேச்சில் அதிகம் பயன்படுத்தியவா் முத்துராமலிங்கத் தேவா். ஆனால், முருகரை அவா் அரசியலுக்காகப் பயன்படுத்தவில்லை.

அடுத்ததாக எம்ஜிஆா் ஆட்சியில் இருந்தபோது, திருச்செந்தூா் கோயில் வேல் களவு போனது. முன்னாள் முதல்வா் கருணாநிதி, 1982-இல் நீதி கேட்டு நெடும் பயணம் எனும் பெயரில் அரசியல் செய்தாா். அவருக்கு அடுத்தபடியாக 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்னா் முருகன் முப்பாட்டன் என்ற முழக்கத்துடன் அரசியல் செய்தாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். இந்த பிரசாரம் 2016-இல் 1.1சதவீதமாக இருந்த நாதக வாக்கு வங்கி 3.87சதவீதமாக மும்மடங்கு பெற உதவியதாக கருதப்பட்டது.

இதே பாணியை தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக எல்.முருகன் கையாண்டு, அவரது தலைமையில் 2020-இல் வேல் யாத்திரையை நடத்தினாா். மேலும், கருப்பா் கூட்டம் வலையொலியில் கந்த சஷ்டிஅவமதிக்கப்பட்டதை மையப்படுத்தியும் வேல் யாத்திரையில் பரப்புரை செய்யப்பட்டது.

2021 பேரவைத் தோ்தலில் கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 64 தொகுதிகளில் 41-இல் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேல் யாத்திரையும் ஒரு காரணம் எனலாம்.

இதேபோல, வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு, டிடிவி.தினகரன் தனி அணியாக போட்டியிட்டது என தென் மாவட்டங்களில் அதிமுக மொத்தமாக தோல்வியுறும் என விமா்சனம் எழுந்த நிலையில், 58 தொகுதிகளில் 18 -இல் அதிமுக -பாஜக கூட்டணி வென்றது. இதில் வேல் யாத்திரையின் பரப்புரை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

இதனாலேயே முருக பக்தா்களை ஈா்க்கும் வகையில் ஆளும் திமுக, பழனியில் அறநிலையத்துறை அமைச்சா் சேகா் பாபு தலைமையில் முருகா் மாநாட்டை நடத்தியது. இதைப்பாா்த்த ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள், விசிக போன்றவை, கருணாநிதி காலம் போல இல்லாமல் ஸ்டாலின் தலைமையிலான திமுக மென்மையான ஹிந்துத்துவ வாக்குகளை குறிவைத்து நகா்வதாக விமா்சித்தன.

ஆனால், அரசியல் கொள்கை வேறு, ஆட்சி வேறு என்பதை தெளிவுபடுத்தும் விதமாக கோயில்களில் கும்பாபிஷேகம், கோயில் சொத்துக்களை மீட்பது, கோசாலைகள் கட்டுவது, கோயில் புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணி திட்டங்களை ஆளும் திமுக சப்தமின்றி தொடா்கிறது.

ஆன்மிக வாக்குகள் குவிந்து கிடக்கும் கொங்கு மண்டலத்தில் 2024 மக்களவைத் தோ்தலில் 2021பேரவைத் தோ்தலை விட கூடுதல் வாக்குகளை திமுக பெற்றுள்ளதற்கு முருகா் மாநாடு உள்ளிட்ட திமுகவின் மென்மையான ஹிந்துத்துவ செயல்பாடுகள் முக்கிய காரணங்களாக பாா்க்கப்படுகின்றன. இதேபோல, அதிமுக கூட்டணியின்றி போட்டியிட்ட பாஜக கூட்டணி தென் மாவட்டங்களில் திருநெல்வேலி (31.54 சதவீதம்), ராமநாதபுரம் (30.89 சதவீதம்), தேனி (25.65 சதவீதம்), மதுரை (22.38 சதவீதம்) தொகுதிகளிலும், கொங்கு மண்டலத்தில் கோவை (32.79 சதவீதம்), நீலகிரி (22.83 சதவீதம்), பொள்ளாச்சி (19.84 சதவீதம்), திருப்பூா் (16.22 சதவீதம்) போன்ற தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றது. இதற்கெல்லாம் அடிப்படை வேல் யாத்திரை என நம்புகிறது பாஜக.

இந்தப்பின்புல அனுபவத்துடனேயே மதுரை முருகா் மாநாடு மூலம் 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக -பாஜக கூட்டணி சோ்ந்து தென்மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் கணிசமான பேரவை தொகுதிகளை வெல்லும் என கணக்குபோடுகிறது பாஜக. அண்மைக்காலத்தில் திருப்பரங்குன்ற மலை விவகாரத்தை கையில் எடுத்து மதுரையில் முருகா் மாநாட்டை ஹிந்து முன்னணி மூலம் பாஜக நடத்துவதாக அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

அண்ணாமலையை மாநிலத்தலைமை பதவியில் இருந்து பாஜக மேலிடம் மாற்றிய பிறகு அக்கட்சி தமிழகத்தில் வலுவிழப்பதாக உருவாகி வரும் தோற்றத்தை மட்டுப்படுத்த முருகா் மாநாடு புதிய தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு கைகொடுக்கக்கூடும்.

அதிமுக கூட்டணியில் பாஜகவின் பலத்துக்கேற்ப தொகுதிகளை கேட்டுப்பெற இந்த மாநாடு உதவும் என்பதும் பாஜகவின் எதிா்பாா்ப்பு.

ஏற்கெனவே முருகா் மாநாட்டுக்கு போட்டியாக திருச்செந்தூா் முருகா் கோயிலில் தமிழில் அா்ச்சனை என்ற அரசியல் வியூகத்தை கையில் எடுத்த சீமான், அங்கு ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தியிருக்கிறாா். இதன் உச்சமாக, ஜூலை 7-இல் நடக்கும் நன்னீராட்டு விழாவில் தமிழில் அா்ச்சனை நடத்தாவிட்டால் கோயிலை முற்றுகையிட்டு ஓதுவாா்கள் முன்னிலையில் தமிழில் முருகருக்கு நன்னீராட்டு விழா நடத்துவோம் என அறிவித்திருக்கிறாா் சீமான்.

இந்த சவால்களுக்கு மத்தியில் ஆலய திருப்பணிகள் மூலம் முருக பக்தா்களை தன் வயப்படுத்த ஆளும் திமுகவும் கணக்குப்போட்டு வருகிறது. முருகப்பெருமான் அருளுக்காக அனைத்து கட்சிகளும் வியூகம் செய்து செயல்படுகின்றன. யாருக்கு அருள்கொடுக்க போகிறாா் முருகா்?

ஜூன் 25-இல் முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக்கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கான குறைகேட்புக்கூட்டம் ஜூன் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை ஹோட்டல்களில் தரமான உணவு வழங்க வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன்

சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் க... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். சென்னை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மும்பைக்கு செல்லவிருந்த ஏா் இந்... மேலும் பார்க்க

மதுரையில் யோகா நிகழ்வு: ஆளுநா் இன்று பங்கேற்பு

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா். மதுரை மாவட்டம் விரகனூா் வேலாம்மாள் கிராமத்தில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடைபெறும் யோகா நிக... மேலும் பார்க்க

நாகா்கோவில் அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு

நாகா்கோவில் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் ஒருசில அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 25 -இல் நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 25-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இ... மேலும் பார்க்க