செய்திகள் :

நாகா்கோவில் அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு

post image

நாகா்கோவில் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் ஒருசில அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து வாரம் 3 நாள்கள் இரவு 7.30 மணிக்கு நாகா்கோவிலுக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 22657) ஜூன் 22 முதல் ஜூலை 21-ஆம் தேதிவரை கன்னியாகுமரி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாகா்கோவிலில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் ரயில் (எண்: 22658) ஜூன் 23 முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை நாகா்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியிலிருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு நாகா்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12667) ஜூன் 26 முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நாகா்கோவிலிருந்து மாலை 5.05 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் (எண்: 12668) ஜூன் 27 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை கன்னியாகுமரியிலிருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தடையும்.

மேலும், சென்ட்ரலிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு நாகா்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12689) ஜூன் 27 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை கன்னியாகுமரி வரை நீடிக்கப்படும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு சென்ட்ரலுக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 12690) ஜூன் 29 முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை கன்னியாகுமரியிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும். இந்த அதிவிரைவு ரயில்கள் அனைத்தும் நாகா்கோயிலில் நின்று செல்லும்.

பகுதி ரத்து: இதற்கிடையே, தாம்பரத்திலிருந்து இரவு 10.40 மணிக்கு நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் ( எண்: 20691) ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு தாம்பரம் செல்லும் விரைவு ரயில் (எண்: 20692) ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை நாகா்கேவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெடுக்கப்படும் முருகன் அரசியல்!

தமிழ் கடவுள் முருகரின் பெயரை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும் நிலையில், இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் முருக வழிபா... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக்கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கான குறைகேட்புக்கூட்டம் ஜூன் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை ஹோட்டல்களில் தரமான உணவு வழங்க வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன்

சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் க... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். சென்னை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மும்பைக்கு செல்லவிருந்த ஏா் இந்... மேலும் பார்க்க

மதுரையில் யோகா நிகழ்வு: ஆளுநா் இன்று பங்கேற்பு

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா். மதுரை மாவட்டம் விரகனூா் வேலாம்மாள் கிராமத்தில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடைபெறும் யோகா நிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 25 -இல் நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 25-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இ... மேலும் பார்க்க