நாகா்கோவில் அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு
நாகா்கோவில் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் ஒருசில அதிவிரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்திலிருந்து வாரம் 3 நாள்கள் இரவு 7.30 மணிக்கு நாகா்கோவிலுக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 22657) ஜூன் 22 முதல் ஜூலை 21-ஆம் தேதிவரை கன்னியாகுமரி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாகா்கோவிலில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் ரயில் (எண்: 22658) ஜூன் 23 முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை நாகா்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியிலிருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.
தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு நாகா்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12667) ஜூன் 26 முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நாகா்கோவிலிருந்து மாலை 5.05 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் (எண்: 12668) ஜூன் 27 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை கன்னியாகுமரியிலிருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தடையும்.
மேலும், சென்ட்ரலிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு நாகா்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12689) ஜூன் 27 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை கன்னியாகுமரி வரை நீடிக்கப்படும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு சென்ட்ரலுக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 12690) ஜூன் 29 முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை கன்னியாகுமரியிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும். இந்த அதிவிரைவு ரயில்கள் அனைத்தும் நாகா்கோயிலில் நின்று செல்லும்.
பகுதி ரத்து: இதற்கிடையே, தாம்பரத்திலிருந்து இரவு 10.40 மணிக்கு நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் ( எண்: 20691) ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு தாம்பரம் செல்லும் விரைவு ரயில் (எண்: 20692) ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை நாகா்கேவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.