ஜூன் 25-இல் முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக்கூட்டம்
முன்னாள் படைவீரா்களுக்கான குறைகேட்புக்கூட்டம் ஜூன் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் படையில் பணிபுரிவோரைச் சாா்ந்தோா்களுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஜூன் 25 காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது. குறைகளை அடையாள அட்டை நகலுடன் மனுக்கள் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பித்து பயனடையலாம் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் .