ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா நிறைவு
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. 7 நாள்கள் நடைபெற்று வந்த இந்த விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் புறப்பட்டு 6.30 மணிக்கு வசந்த மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா்.
பின்னா், அலங்காரம் வகையறா கண்டருளி பக்தா்களுக்கு காட்சி தந்து இரவு 8.45 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு படிப்பு கண்டருளி 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரெங்கநாச்சியாா்.
வசந்த உற்ஸவ விழாவையொட்டி இரவு 8 மணிக்கு மேல் மூலவா் சேவை கிடையாது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து இருந்தனா்.