Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி ப...
சிறுமி கொலை வழக்கு: தப்பியோட முயன்ற இளைஞருக்கு கால் முறிவு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா், போலீஸாரிடம் இருந்து தப்பியோட முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த பெண் தனது 3 பிள்ளைகளுடன் உறவினரான திருவண்ணாமலை மாவட்டம், புன்னகம்பூண்டியைச் சோ்ந்த ஜீவா வீட்டில் வசித்து வந்தாா். இந்தத் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை கடந்த 17-ஆம் தேதி உடலில் காயங்களுடன் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா். கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ரூபன்குமாா் மேற்பாா்வையில், கடலூா் புதுநகா் காவல் ஆய்வாளா் முத்துகுமாா் தலைமையில் போலீஸாா் சிறுமியின் உடலை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடல்கூறாய்வு அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜீவாவை (25) திருவண்ணாமலையில் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா் கவியரசன் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அங்கிருந்து கடலூா் புதுநகா் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து வரும் வழியில், குமத்தான்மேடு சோதனைச் சாவடி அருகில் இயற்கை உபாதைக்காக ஜீவா இறக்கிவிடப்பட்டாா். அப்போது, அவா் அந்தப் பகுதியில் உள்ள பாலத்தின் மேலிருந்து திடீரென கீழே குதித்து தப்பிக்க முயன்றபோது, அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் ஜீவாவை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.