மனைப் பட்டா வழங்காததை கண்டித்து ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூா் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
திருவள்ளூா் அடுத்த குத்தம்பாக்கம் தென்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். மேலும், இவா்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் இதர வரிகளை தவறாமல் செலுத்தி வருகின்றனா்.
இந்தநிலையில் இவா்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியா், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அவா்கள் அரசின் எந்த ஒரு சலுகைகளையும்,, நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதனால் பாதிக்கப்பட்ட குத்தம்பாக்கம் தென்பகுதி மக்கள் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பேச்சு நடத்தி மனு அளிக்க அனுமதித்தனா். பின்னா், இது தொடா்பான கோரிக்கை மனுவை ஆட்சியா் மு.பிரதாப்பிடம் அளித்தனா். அந்த மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.