செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

post image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் வினாடிக்கு 25,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை முதல் கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,218 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 16,341 கன அடியாகவும் சனிக்கிழமை காலை வினாடிக்கு 18,220 கன அடியாகவும் அதிகரித்து உள்ளது.

நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நேற்று காலை 113.57 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 113.69 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர் இருப்பு 83.76 டிஎம்சியாக உள்ளது.

முன்னெடுக்கப்படும் முருகன் அரசியல்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கா்நாடக மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுத... மேலும் பார்க்க

விருதுநகரில் கொடூர கொலை: 3 பேர் வெட்டிக் கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொலை செய்த கணவர் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவ... மேலும் பார்க்க

தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே சிறுத்தை இழுத்துச் சென்ற நான்கு வயது சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை அருகே உ... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது... மேலும் பார்க்க

உலகத்தை இணைத்துள்ளது யோகா: பிரதமர் மோடி

விசாகப்பட்டினம்: யோகா முழு உலகத்தை இணைத்துள்ளது. யோகா உலகத்துடன் ஒற்றுமையை நோக்கி மக்களை வழிநடத்துகிறது, அதே நேரத்தில் சர்வதேச யோகா நாள் உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் மனிதகுலத்திற்கான பண்டைய நட... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை!

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவை என்ற நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று ரத்து செய்துள்ளது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நாளை மறுநாள் (... மேலும் பார்க்க