செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங் பேச்சு

post image

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் உதம்பூரில் இந்திய ராணுவ வீரர்களுடனான யோகா நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

"ராணுவ வீரர்கள் உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் வலிமை மிக முக்கியம். அத்துடன் உடல்நலனும் முக்கியம். நீங்கள் வலிமையாக இருந்தால் நமது எல்லைகள் வலுவாக இருக்கும். எல்லைகள் வலுவாக இருக்கும்போது, ​​இந்தியா வலுவாக இருக்கும்" என்று கூறினார்.

மேலும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசுகையில், "இந்திய மண்ணில் ஏற்படும் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலும் பாகிஸ்தானுக்கு பேரழிவை ஏற்படுத்தும். பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த வகையான நடவடிக்கையையும் எடுக்க இந்தியா தயாராக உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இந்த நடவடிக்கையின் மூலம், இந்தியாவுக்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையும் பயங்கரவாதம் செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதையும் பாகிஸ்தானுக்கு சொல்லி இருக்கிறோம். இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் கொள்கை ஒருபோதும் நிறைவேறாது என்று காட்டியிருக்கிறோம்" என்று பேசினார். இந்த நிகழ்வில் ராணுவத் தளபதி உபேந்திர திவேதியும் கலந்துகொண்டார்.

இதையும் படிக்க | நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது! - டிரம்ப் ஆதங்கம்

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

ஜார்க்கண்டில் பெய்து வரும் கனமழையால், ஒடிசா மாநிலத்திலுள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஒடிசாவின் சுப... மேலும் பார்க்க

இந்தியாவில் 295 பெட்டிகள், 6 என்ஜின்களுடன் இயக்கப்படும் மிக நீண்ட ரயில்! உண்மையா?

295 பெட்டிகளுடனும், 6 என்ஜின்களுடனும் இந்திய ரயில்வே ஒரு ரயிலை இயக்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே மிக நீண்ட ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பிடித்திருக்கிறது. இதன் பெயர் சூப்பர் வாசுகி.... மேலும் பார்க்க

தீர்வு காண்பதில் அல்ல, வெற்று முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார் மோடி: ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளாரே தவிர தீர்வு காண்பதில் அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் நிலச்சரிவால் ரயில் சேவைகள் பாதிப்பு!

கர்நாடக மாநிலத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், முக்கிய ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தக்‌ஷிணா கன்னடா மாவட்டத்தின், எடக்குமாரி மற்றும் ஷிரிபகிலு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையி... மேலும் பார்க்க

இந்தியாவிலும் விரைவில் டெஸ்லா! எப்போது?

மின்சார வாகன உற்பத்தியில் பெரிதும் விரும்பப்படும் டெஸ்லா நிறுவனம், தற்போது இந்தியாவிலும் தடம் பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்த... மேலும் பார்க்க

இது 96 காதல் அல்ல, 93 காதல்! முதியவரின் காதலும் நகைக் கடைக்காரரின் மனிதாபிமானமும்!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள நகைக்கடை ஒன்றில், 93 வயது முதியவர் தனது மனைவிக்கு மாங்கல்யம் வாங்க வந்த போது, நெகிழ்ந்துபோன நகைக்கடைக்காரர் ரூ.20 மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாங்க... மேலும் பார்க்க