செய்திகள் :

ஊட்டி இந்தி பதாகை சர்ச்சை: சுட்டிக்காட்டிய விகடன்; கிழித்தெறிந்த ரயில்வே நிர்வாகம்; பின்னணி என்ன?

post image

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஊட்டி ரயில் நிலையம் ஒன்றாகும்.

பாரதியாரின் பாடல் வரிகளை இந்து மகாசபையை உருவாக்கியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா எழுதியதாகத் தவறான பதாகை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

சர்ச்சை பதாதைகள்
சர்ச்சை பதாதைகள்

இதனைத் தொடர்ந்து ரயில் ஊட்டி நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டோம்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொன்மொழிகள் அடங்கிய பதாகைகளை அமைத்திருந்தனர்.

அதில் பாரதியார் எழுதிய பிரபல பாடல் வரிகளில் ஒன்றான, "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்கிற பாடல் வரிகளை மதன் மோகன் மாளவியா எழுதியதாகப் பெயர் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், 'இந்தியைப் பற்றிச் சிறு பேச்சு அறிவு மூலமாக இந்தி பேசத் தெரியாத மக்கள் நிறையக் காரியங்களைச் சாதிக்கின்றனர்' போன்ற வாசகங்களையும் அமைத்திருந்தனர்.

இந்தச் சர்ச்சை பதாகைகள் குறித்து விகடன் இணையப் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதாகைகளை ரயில்வே நிர்வாகத்தினர் கிழித்தெறிந்துள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்த ரயில் நிலைய அதிகாரிகள், "ரயில் நிலைய சுவர்களில் இருக்கும் குறிப்பிட்ட சில பதாகைகளை அகற்ற வேண்டும் எனச் சேலம் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது. அதனைத் தொடர்ந்து அகற்றினோம்" என்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற ரயில் நிலையங்களில் இது போன்ற சர்ச்சைக்குரிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்ப் பற்றாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Air India Violations: "3 அதிகாரிகளை நீக்க வேண்டும்; இனி இதுபோல நடந்தால்..." - DGCA எச்சரிக்கை!

விமான பாதுகாப்பைக் கண்காணிக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation - DGCA) டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அதன் 3 அதிகாரிகளை அனைத்து பதவிகள் மற்றும் ... மேலும் பார்க்க

Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி பேச்சு

'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா' என 11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ... மேலும் பார்க்க

கோடியூர்: வாரச்சந்தை நடைபெறும் இடத்துக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள்; முகம் சுளிக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள கோடியூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் வாரச் சந்தை, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்களுக்கு முக்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சுட்டிக்காட்டிய விகடன்; விறுவிறுவென தொடங்கிய ரவுண்டானா பணிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையில் ரவுண்டானா அமைக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழக அரசின் ‘நமக்கு நாமே’ திட்டம் ரூ1 கோடியில் லாயிட்ஸ் சாலையை புதுப்பிக்க டிஆர்ஏ நிறுவனம் அடிக்கல்

சென்னை நகரை அழகுபடுத்தும் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமான ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு உதவிடும் வகையில் சென்னை நகரின் மிகவும் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஆர்ஏ 1 கோடி ரூபாய் செலவில் சர் வி.பி.... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து எதிரொலி; விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விமான பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள கட்டடங்களை நெறிப்படுத்தும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து... மேலும் பார்க்க