செய்திகள் :

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

post image

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்.

சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்திலுள்ள் விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, கின்னஸ் உள்பட பல்வேறு உலக சாதனைகளைப் படைக்கும் என்று மாநில முதல்வரும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரதமர் மோடி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷைப் புகழ்ந்து பேசினார்.

அவர் பேசியதாவது: “யோகா நாளை சமூகத் திருவிழாவாக மாற்றி நடத்தியதற்காக நாரா லோகேஷ், சுமார் ஒன்றரை மாதமாக கடுமையாக உழைத்தார். அவரது முயற்சியால் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து சமூகத் திருவிழாவாக யோகா நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான அவரது திட்டமிடலும் செயல்பாடும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைத்து நடத்திட நாடு முழுவதும் இதே பாணியில் செயல்படலாம்” என்று பேசினார்.

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையி... மேலும் பார்க்க

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் போட்டி: மத்திய அரசு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.2.3 கோடி மதிப்பிலான பரிசுகளுடன் கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கான போட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தப் ... மேலும் பார்க்க