செய்திகள் :

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

post image

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார்.

பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தனம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர்-நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது.

மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அடங்கய தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இதற்கு முன்னதாக ரூ. 400 ஓய்வூதியம் வழங்கப்பட்டிருந்தது. அது தற்போது ரூ.1,100 ஆகந உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்.

இதுதொடர்பாக நிதிஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில்,

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அனைத்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.400, தற்போது ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வரும் ஜூலை முதல் அதிகரித்த ஓய்வூதியம் அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் இந்தத் தொகையானது மாதத்தின் 10-ம் தேதிக்குள் அனைவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த ஓய்வூதியம் மூலம் 1,9,69,255 பயணிகள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

தேனிலவு கொலை: மனைவி உள்பட 2 பேருக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு 13 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க