செய்திகள் :

'ஒரு நாள் கோடீஸ்வரி' - 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

post image

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

20 ஆண்டுகளாக கவுன்டியில் வேலை செய்யும் அவர், உடனடியாக அது குறித்து தனது மேலாளருக்கு தகவல் அளித்திருக்கிறார். விசாரணையில் மனித தவறுகளால் பெரும் தொகை அவரது கணக்குக்கு வந்தது தெரியவந்துள்ளது.

Michigan
Michigan

கடந்த மாதம் சம்பள உயர்வு பெற்ற அவரது கணக்கில் சம்பளத்தை மாற்றுவதற்கு பதிலாக ஊழியர் ஐடியை உள்ளிட்டுள்ளனர்.

பொதுவாக பலகட்ட சரிபார்ப்புக்குப் பிறகே மாவட்ட நிர்வாகத்தின் கணக்கிலிருந்து தொகை விடுவிக்கப்படும். ஆனால் எல்லாவற்றையும் கடந்து பெரும்தொகை சென்றிருப்பதால் அதிகாரிகள் இதற்கு தொடர்புடைய இரண்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். ஒரு ஊழியரை இடை நீக்கம் செய்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகி வாரன் எவன்ஸ், "இதுபோன்ற தவறுகளில் சாக்குபோக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது." எனக் கூறியுள்ளார்.

Money
Money

ஊழியர்கள் இந்த தவறுக்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உதிய முறையைக் கைகாட்டியிருக்கின்றனர். Oracle என்ற மென்பொருள் மூலம் ஊதியம் அளிக்கப்படுகிறது.

கவுன்டி ஊழியர்கள் இந்த மென்பொருளுக்கு இன்னமும் பழக்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர். இந்த மென்பொருளால் ஊதியத்தில் பிழை ஏற்படுவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் கிட்டத்தட்ட 100 காவலர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கவுன்டி நிர்வாகம் மேம்பட்ட ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும் அல்லது ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

தவறுதலாக 1.6 மில்லியன் டாலர் சம்பளம் பெற்று, ஒரு நாள் கோடீஸ்வரியாக வாழ்ந்த கவுன்டி ஊழியர், நேர்மையாக அதைத் திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

`ஸ்கூட்டி ரூ. 1 லட்சம், நம்பர் ரூ. 14 லட்சம்' - ஏலத்தில் போட்டிபோட்டு வாங்கிய இமாச்சல் நபர்

இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஸ்கூட்டி வாங்கி, அதற்கு போக்குவரத்துத் துறையில் ரூ. 14 லட்சத்துக்கு விஐபி நம்பர் வாங்கியது பேசுபொருளாகியிருக்கிறது.இதில், சோலன் மாவட்டதிலுள்ள பட்டியைச் ... மேலும் பார்க்க

ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு!

படிப்புக்கும், வேலைக்கும் வயது ஒரு தடை கிடையாது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங்(41).... மேலும் பார்க்க

ஹைதராபாத் மேம்பாலத்தில் ஓட்டமெடுத்த ஒட்டகம்; சவாரியில் சிக்கிய இளைஞரை மீட்ட சம்பவம்.. வைரல் காட்சி!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான மேம்பாலத்தில், ஒருவர் ஒட்டகத்தின் மீது ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தின் பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலையில் இந்த சம்பவம் நடந... மேலும் பார்க்க

``திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு ரூ.4,339 அபராதம்'' - மணமகள் சொல்வது என்ன? வைரலாகும் பதிவு

திருமணம் என்றாலே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கேட்டரிங் முதல் டெக்கரேஷன் வரை திருமண நிகழ்விற்காக ஒரு பெரிய தொகையை செலவிடுவார்கள்.குறிப்பாக விருந்தினர்களின் எண்ணிக்கை பொறுத்து உணவுகள் ஏற்பாடு செ... மேலும் பார்க்க

Telegram: ``நான் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா'' - டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரெஞ்சு பத்திரிகையான லு பாயிண்டி செய்தியிடம் அளித்த பேட்டியி... மேலும் பார்க்க

Iran Vs Israel: ``அணு ஆயுதம் தயாரிக்கும் உலை மீது குண்டு விழுந்தால் என்னவாகும்?'' - ஓர் அலசல்!

ஈரானிலும் - இஸ்ரேலிலும் தொடர்ந்து குண்டுமழைப் பொழிகிறது. இதில் அதிகளவில் பாதிக்கப்படுவது இருதரப்பிலிருந்தும் அப்பாவி மக்கள்தான். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என எந்த நாடும் பேச்சுவார்த்த... மேலும் பார்க்க