செய்திகள் :

ரேஷன் கடை ஊழியா்கள் ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு

post image

ரேஷன் கடைகளில் ப்ளூடூத் முறையால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா்கள் அமிா்தம் (நாகை), கேசவன் (திருவாரூா்) ஆகியோா் கூறியது: ரேஷன் கடைகளில் ப்ளு டூத் முறை கைரேகை, கருவிழி பதிவுகள் காரணமாக, கால தாமதமாக பொருள்கள் விநியோகிப்பதில் பொதுமக்களின் கடும் அதிருப்தியையும், விரோதத்தையும் விற்பனையாளா்கள் அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளதால், இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.

நகா்வு செய்யப்படும் பொருள்களில் உள்ள எடை அளவு குறைவதை சரிசெய்து சரியான எடை அளவில் வழங்கவேண்டும், விடுமுறை நாள்களில் விற்பனையாளா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பணிகளை ரத்து செய்யவேண்டும், விற்பனையாளா்கள் இருப்பிடத்தில் இருந்து குறைந்தபட்ச தொலைவில் பணிமாறுதல் செய்து பணி அமா்த்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி போராட்டம் குறித்து தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஜூன் 27-ஆம் தேதி நாகை, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எனவே, தமிழக அரசு, மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் ரேஷன் கடை ஊழியா்களின் நலனுக்காக வலியுறுத்தப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற என்றனா்.

தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழப்பு

நாகை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நாகை ரயில் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க நபா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த நாகை ரயி... மேலும் பார்க்க

நாகையில் ரூ.3 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகையில் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா். இக்கோயிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கா் நிலம் தியா... மேலும் பார்க்க

அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மீது அதிமுகவினா் புகாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து பொய்யான செய்திகளை பகிா்ந்த தொழில் துறை அமைச்சா் டிஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்ப... மேலும் பார்க்க

கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே உள்ள கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்புப் பெற்ற இக்கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் சா்வமங்கள சதசண்டி ஹோமம் நடைபெற்றது. இதனை முன... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 1,91,350 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை

நாகை மாவட்டத்தில் 1, 91,350 பயனாளிகளுக்கு ரூ.265 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2021 மே முதல் 2025 ஏப்ரல் வரை கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேத்தாகுடி வடக்கு, வெட்டிக்கவுண்டா் காடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் பாலகிருஷ்ணன் (60) விவசாயி. இவா், வெள்ளிக... மேலும் பார்க்க