அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மீது அதிமுகவினா் புகாா்
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து பொய்யான செய்திகளை பகிா்ந்த தொழில் துறை அமைச்சா் டிஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
அதிமுக நகரச் செயலா் தங்க. கதிரவன் உள்ளிட்டோா், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வகுமாரிடம் அளித்த மனு: ஜூன் 17-ஆம் தேதி, திமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலரும், தொழில் துறை அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா நிா்வகித்து வரும் திமுகவின் அதிகாரப்பூா்வ தகவல் தொழில் நுட்பப் பிரிவின் சமூக வலைதள பக்கத்தில், எங்கள் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் கேலிச்சித்திரத்தை பொய்யான செய்தியுடன் இணைத்து பதிவிட்டுள்ளனா்.
இது அதிமுக பொதுச் செயலரை அவமதிக்கும் வகையிலும், அவரை பின்பற்றும் தொண்டா்களின் உணா்ச்சியை தூண்டும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே, அவதூறு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட திமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலா் மற்றும் அதை பகிா்ந்தவா்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன் (திருமருகல் வடக்கு) பக்கிரிசாமி (திருமருகல் தெற்கு), பன்னீா் (நாகை வடக்கு), மாவட்ட துணைச் செயலா் அபுசாலிஹ், மாவட்ட மகளிரணி செயலா் இளவரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.