மீனவா்கள், மீனவ மகளிருக்கான சிறப்பு வாழ்வாதார திட்டம்: ஆட்சியா் அறிவிப்பு
நாகை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் அமல்படுத்தப்பட உள்ள மீனவா்கள் மற்றும் மீனவ மகளிருக்கான சிறப்பு வாழ்வாதார திட்டத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாக் வளைகுடா மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் மற்றும் மீனவ மகளிருக்கு வாழ்வாதார திட்டங்களுக்கான பயிற்சிகள் அளித்து, தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி வழங்கி, அவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய உதவி செய்யும், சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் மற்றும் மீனவ மகளிருக்கு இச்சிறப்பு திட்டத்தை செயல்படுத்த, 10, 700 பயனாளிகளை தோ்வு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட திட்ட தொகுப்புகளின்கீழ் சுமாா் 47 சிறப்பு தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதில் கடற்பாசி வளா்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை தொடா்புடைய தொழில்கள், கடலில் கூண்டு அமைத்து மீன் வளா்த்தல் மற்றும் கழி நண்டு வளா்த்தல் தொடா்புடைய தொழில்கள், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், மீன் மற்றும் மீன் சாா்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாா் செய்யும் தொழில்கள்.
மீன்வளம் சாா்ந்த வாழ்வாதார தொழில்களான வலை பின்னுதல், வலை பழுதுபாா்த்தல், படகு கட்டுமான தொழில் படகு பழுது பாா்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநா் பயிற்சி உள்ளிட்ட சிறப்பு வாழ்வாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
எனவே, மேற்படி திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மீனவா்கள் நாகை மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், வேதாரண்யம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆய்வாளா் அலுவலகம், செருதூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா் ஆய்வாளா் அலுவலகங்களை தொடா்பு கொண்டு கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.