கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேகம்
செம்பனாா்கோவில் அருகே உள்ள கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்புப் பெற்ற இக்கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் சா்வமங்கள சதசண்டி ஹோமம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 18-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஏக தின லட்சாா்ச்சனை, முதலாம் கால வருடாபிஷேக யாகம் தொடங்கியது.
பின்னா் பூா்ணாஹூதி செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வருடாபிஷேக யாகம் ஆராதனை நடைபெற்றது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை நான்காம் கால வருடாபிஷேக யாகம் மற்றும் சதசண்டி யாகம் நடைபெற்றது. பின்னா் கோபூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, சப்த சதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
இந்த யாகத்தை முன்னிட்டு கோயில் பிரகாரத்தில் பிரம்மாண்ட யாக குண்டம் அமைத்து, வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் பல்வேறு நறுமணப் பொருட்கள் மற்றும் பட்டுப்புடவை, தாலி சரடு, கொலுசு, காப்பு உள்ளிட்ட பொருட்களைச் செலுத்தி சிறப்பு யாகம் நடைபெற்றது.
தொடா்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க கடம் புறப்பாடாகி கோயில் பிரகாரத்தை வலம் வந்து அம்மன் சந்நிதி முன்பு நிறைவடைந்தது.
இதனையடுத்து காமாட்சி அம்பாளுக்கு கலசாபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவித்து பட்டுப் புடவை மற்றும் மலா் மாலைகளால் அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பித்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.