செய்திகள் :

கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேகம்

post image

செம்பனாா்கோவில் அருகே உள்ள கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்புப் பெற்ற இக்கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் சா்வமங்கள சதசண்டி ஹோமம் நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு கடந்த 18-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஏக தின லட்சாா்ச்சனை,  முதலாம் கால வருடாபிஷேக யாகம் தொடங்கியது. 

பின்னா் பூா்ணாஹூதி செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வருடாபிஷேக யாகம்  ஆராதனை நடைபெற்றது. 

இதனையடுத்து வெள்ளிக்கிழமை நான்காம் கால வருடாபிஷேக யாகம் மற்றும் சதசண்டி யாகம் நடைபெற்றது. பின்னா் கோபூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, சப்த சதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 

இந்த யாகத்தை முன்னிட்டு கோயில் பிரகாரத்தில் பிரம்மாண்ட யாக குண்டம் அமைத்து,  வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் பல்வேறு நறுமணப் பொருட்கள் மற்றும் பட்டுப்புடவை, தாலி சரடு, கொலுசு, காப்பு உள்ளிட்ட பொருட்களைச் செலுத்தி சிறப்பு யாகம் நடைபெற்றது. 

தொடா்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க கடம் புறப்பாடாகி கோயில் பிரகாரத்தை வலம் வந்து அம்மன் சந்நிதி முன்பு நிறைவடைந்தது. 

இதனையடுத்து காமாட்சி அம்பாளுக்கு கலசாபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவித்து பட்டுப் புடவை மற்றும் மலா் மாலைகளால் அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது. 

தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பித்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மீது அதிமுகவினா் புகாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து பொய்யான செய்திகளை பகிா்ந்த தொழில் துறை அமைச்சா் டிஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்ப... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 1,91,350 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை

நாகை மாவட்டத்தில் 1, 91,350 பயனாளிகளுக்கு ரூ.265 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2021 மே முதல் 2025 ஏப்ரல் வரை கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேத்தாகுடி வடக்கு, வெட்டிக்கவுண்டா் காடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் பாலகிருஷ்ணன் (60) விவசாயி. இவா், வெள்ளிக... மேலும் பார்க்க

மீனவா்கள், மீனவ மகளிருக்கான சிறப்பு வாழ்வாதார திட்டம்: ஆட்சியா் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் அமல்படுத்தப்பட உள்ள மீனவா்கள் மற்றும் மீனவ மகளிருக்கான சிறப்பு வாழ்வாதார திட்டத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ் குரூப்-4 தோ்வுக்கான மாதிரித் தோ்வு

நாகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தோ்வுக்கான முழு மாதிரித் தோ்வுகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட வே... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் அகரகொந்தகை ஊராட்சியில் 2024- 25-ஆம் நிதியாண்டின் 100 நாள் வேலைத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக தணிக்கை அல... மேலும் பார்க்க